நுவரெலியா லிந்துலையில், உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம்(காணொளி)

262 0

நுவரெலியா, லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் இருந்து, மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றிலிருந்து, உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

ரட்ணகிரி தோட்டத்தில் உள்ள சிலர், தொழிலுக்காக அப்பகுதிக்குச் செல்லும் வேளையில் ஆற்றில் சடலம் மிதப்பதை கண்டுள்ளனர்.

அதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத்தெரிவித்த லிந்துலை பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.