வவுனியாவில், சுகாதார தொண்டர்கள் 3 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

262 0

 

வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியாற்றிய சுகாதார தொண்டர்கள், இன்று 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.