தந்தை, மகன் மோதல் – தாய் பலி

224 0

அரநாயக்க – களுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.

தந்தை மற்றும் மகனுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாவே தாய் கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த பெண் 61 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.