குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லை – டக்ளஸ்

249 0

நாட்டில் குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லாமையே மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்குக் காரணம் என ஈழமக்கள் ஜனனாயக கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செயற்கையாக மக்கள்மீது புகுத்தப்படுகின்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தவிர்த்துக் கொள்வதன் ஊடாக பல உயிர்களை காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருந்தன.

எனினும் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு பொறுப்புகளில் இருந்து நழுவுவது முறையற்ற செயல் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.