வியட்நாமிற்கான உத்தியாக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று முற்பகல் அவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவர்த்தை ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரு நாடுகளுக்கிடையிலும் இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.