மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு, மீட்பு பணி தொடர்கின்றது.

233 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ண இதனை தெரிவித்தார்.

தற்போதும் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்றுகின்ற நிலையில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அகழ்வு இயந்திரங்கள் 12, டிப்பர் வாகனங்கள் 15தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த அனர்த்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர் வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களுள் 6 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் ஒருவர் அவசர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.