காணாமல் போன ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

207 0

காணாமல் போயிருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, அராவத்தை, ரம்புக்யாய, பதியதலாவ வீதி பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மகாவலி கங்கைக்கு மின்பிடிக் சென்றிருந்த போது காணாமல் போனதாக அவரின் மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், குறித்த நபர் மீன்பிடிக்க சென்ற இடத்திற்கு அருகில் உள்ள குழி ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள நபர் முதலையின் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.