மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்

203 0

கொலன்னாவை – மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கவலைக்குறிய விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், இருப்பிடங்களை இழந்தோருக்கும், அரசாங்கம் தனது கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

குப்பை மேட்டை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த இருந்த நிலையில் இந்த விபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.