கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டெங்கு மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 53 பேர் மரணித்தனர்.
29 ஆயிரம் பேர் வரையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக திருகோணலையில் 15க்கும் அதிகமானவர்கள் டெங்கினால் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.