உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது? என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் வகையில் நேற்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குரல் – சீ.வி.
இதனிடையே, இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கு பொறுப்பான அமைச்சர் கொன்சீற்றா பியறாவன்ரி வெல்ஸ் தலைமையிலான குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பான வட மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டார்.
குரல் சி.எம்