வடக்கு, கிழக்கு தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் குறித்து அமைச்சர் மனோ கணேசன்

223 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி, புதிய வேலைவாய்ப்புகளில் வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், சமுர்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் இருந்து இதனை ஆரம்பிக்குமாறு, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் எஸ். பி.திஸாநாயக்கவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு அரச தொழில்வாய்ப்பை வழங்க வேண்டும் எனக்கோரி நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.