தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றம் கூறுவதும், துவேசமாக செயற்படுவதுமே அவர்களின் நடவடிக்கையாக இருக்கிறன.
எந்த முன்னேற்றத்திலும் ஈடுபடாமல் இருப்பதே தோதான அரசியலாக அவர்கள் கருதுகின்றனர்.
இது வெறுப்பையும் வன்முறையையுமே ஏற்படுத்தும் என சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.