ஓய்வுபெற்ற இராணுவத்தினர்களுள், தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையிலும், பொதுமக்கள் சேவையில் அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் வகையில் இந்த சமாதான நீதவான் பதவி வழங்கப்படுவதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நீதி அமைச்சில் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.