இலங்கை – இந்திய மீனவர்களின் 3வது சுற்று பேச்சுவார்த்தை 7ஆம் திகதி கொழும்பில்

273 0

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான 3வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் அந்த நாட்டு கடற்றொழில் அமைச்சர் ராஜா மோஹன் சிங் தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, தற்போதைய நிலவரம் குறித்து வடக்கிலுள்ள மீனவர்களுடன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நாளைய தினம் பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார்.

இதன்போது, இலங்கையில் தடுப்பில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகள் சிலவற்றை விடுவிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீளவும் பிரவேசிக்காது என்று இந்தியா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே படகுகள் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது, தமிழக மீனவர்களின் 130 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.