மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது- லக்ஷ்மன் கிரியெல்ல (காணொளி)

216 0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது என, உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட மாட்டோம் எனவும், பணிப்பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் மூலம் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற முடியாது எனவும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் மாலபே மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு விசாரணை செய்யப்படுவதனால், வைத்திய பீட மாணவர்களை கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு கூறுவது இலங்கை வைத்திய சபையினதும், தொழிற்சங்கங்களினதும் கடமையாகும் எனவும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.