யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்(காணொளி)

323 0

யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

இதற்கமைய நீர்வேலி கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதகுருமார், மாணவர்கள் இணைந்த பொங்கல் பொங்கி தொடர்ந்து தமிழ், சிங்கள கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி நா.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற மூவின மக்களும் அடங்கிய சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்திற்கு, பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் கோ.வரதராஜமூர்த்தி யாழ்;ப்பாண வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.இரவீந்திரநாதன், அ.அகிலதாஸ், சி.மாணிக்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக சீதாதேவி மகளிர் பாடசாலை அதிபர் மற்றும் கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலய அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.