கணக்கு வாக்கெடுப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு ஆராய்வு

239 0

367 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கணக்கு வாக்கெடுப்புக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு நாளை (18) ஆராயவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவினால் இந்த யோசனை அனுமதிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அன்று 9.30 மணி முதல் நண்பகல் 12.30 விவாதம் நடத்தப்படும்.

இதனை விடவும் நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் என்பனவும் இக்குழுவால் நாளை ஆராய்ந்து அனுமதிக்கப்பட்டு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதேவேளை, மத்திய வங்கியின் திறைசேரி முறி விநியோகம் பற்றிய தடயவில் கணக்காய்வு தொடர்பில் மத்திய வங்கி முன்வைத்திருக்கும் கண்காணிப்புக்கள் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.