உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்பு!

226 0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை யாழ்ப்பாணம், பலச்சிவேலி பகுதியில் நடத்திய சோதனையின் போது கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம், பலச்சிவேலி, ஐயனார் கோவிலடி பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு செடிக்கு அருகில் நுட்பமாக மறைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த துப்பாக்கி பற்றிய மேலதிக விசாரணைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.