யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

Posted by - November 11, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இன்று மாவட்டசெயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக  வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய வசதிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…..(காணொளி)

Posted by - November 11, 2017

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற நுவரெலியா ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்டுள்ள, தொண்டமானின் பெயரை மீண்டும் வைப்பதற்கு, இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உந்து சக்தியாக செயற்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை, அங்கிருந்து நீக்கியமை தவறான விடயம் என, தமிழ்நாட்டு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - November 11, 2017

மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மாலை நடைபெற்றது. இக் கலந்துரையாடல் மன்னார் ஆயர் இல்லத்தில், மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான

தொடர் கன மழையினால் வான் பாயும் வழுக்கியாறு! மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

Posted by - November 11, 2017

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியினை சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை, மற்றும் மண்டான் ஆகிய பகுதி

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகரான புதிய கூட்டணி?

Posted by - November 11, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி புதிய அரசியல் கட்சியொன்றை தாபிக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வகையில் செயற்படும் அணியொன்றை உருவாக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய அனைத்து ஆணைகளையும், தமிழரசுக் கட்சி மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக தமிழரசு கட்சி மீதான நம்பிக்கை

மங்களவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் – டிலான்

Posted by - November 11, 2017

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளை இம்புல்கொட பிரதேசத்தில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்கக் கூடியதும், சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கக் கூடியதும், செல்வந்தர்களிடமிருந்து வரி அறவிடக் கூடியதும், உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டக் கூடியதும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக் கூடியதும், இனநல்லிணக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக் கூடியதுமான

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம்

Posted by - November 11, 2017

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்தாகப் பிடித்து வேலி அமைக்க முடியும் எனவும் இக்காணி கூட அரச காணி எனத் தெரிவிக்கும் பொது

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - November 11, 2017

அம்பலந்தொடை – கெகேகல்ல – ஹபரகல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தொடை காற்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து இரு விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - November 11, 2017

வத்தளையில் 86.47 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. ஹூனுபிட்டிய பிரதேசத்தில் 7.65 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பயணித்த மூவர் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வத்தள – மாபோல பிரசேத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் இருந்து 78.82 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வெள்ளம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகத்திற்குரியவர்கள், மஹார நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

Posted by - November 11, 2017

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும்.  யாழ்ப்பாண மாநகர சபைக்கு தேர்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவால்  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.