நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…..(காணொளி)

414 0

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற நுவரெலியா ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்டுள்ள, தொண்டமானின் பெயரை மீண்டும் வைப்பதற்கு, இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உந்து சக்தியாக செயற்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை, அங்கிருந்து நீக்கியமை தவறான விடயம் என, தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை, மீண்டும் வைப்பதற்கு வலியுறுத்தி, நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிராந்திய பொறுப்பாளர் வெள்ளையன் தினேஷ் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a comment