கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

325 0
வத்தளையில் 86.47 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
ஹூனுபிட்டிய பிரதேசத்தில் 7.65 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பயணித்த மூவர் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வத்தள – மாபோல பிரசேத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் இருந்து 78.82 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகத்திற்குரியவர்கள், மஹார நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment