முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்- ஏ.மரியராசா(காணொளி)
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும் என, முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.மரியராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் நல்லதண்ணீர் தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரையான 73 கிலோ மீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளைக் கொண்ட கடற்பகுதிகளிலும், நாயாறு வட்டுவாகல் ஆறு உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தொழிலான கடற்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வட்டுவாகல் ஆறு கொக்கிளாய் ஆறு ஆகிய சிறுகடல் பகுதிகளில்

