மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனை – விதுர விக்ரமநாயக்க

290 0

vithura-vickramanayake-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக அமைந்திருந்தது என முன்னாள் பிரதமர் அமரர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.மஹிந்தவும் மைத்திரியும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென தந்தை விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ரட்னசிறி விக்ரமநாயக்க, அமரர் பண்டரநாயக்கவினைத் தவிர வேறு எவருக்கும் இரண்டாம் பட்சமானவரல்ல என  குறிப்பிட்டுள்ளார்.

பாரிய சொத்துக்களுடன் தைரியமாக அரசியலில் ஈடுபட்ட ஓர் சிரேஸ்ட தலைவர் தமது தந்தை எனவும் அவருக்கு புதல்வராக பிறந்தமை தாம் செய்த பாக்கியம் எனவும்  தெரிவித்துள்ள அவர் மக்களுக்காக சிறந்த அர்ப்பணிப்புடன் ரட்னசிறி விக்ரமநாயக்க சேவையாற்றியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.