பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை- எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

298 0

 

battiபௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்கேணி திராய்மடுவில் இடம்பெற்ற நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவக்கேணி திராய்மடுவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி, திராய்மடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், இரா.துரைரெட்ணம் , கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இணைப்பு செயலாளர் எ.இ.போல், ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி டேவிட், ஓய்வுநிலை கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.நேசதுரை, சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.