ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இனியவன் சாவகச்சேரியில் துாக்கில்!

286 0

15823604_1191634510920027_1158708215193034967_nஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.

இனியவனை கொலையாளிகள் கொலை செய்து சடலமாக துாக்கில் தொங்கவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் தற்போது அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவருகின்றது.