முல்லைத்தீவில் இருபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன (காணொளி)
முல்லைத்தீவில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன் எஞ்சிய பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்; இவ்வாண்டு 41 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் ஒரு மாதங்களில் அறுவடை செய்யக்;கூடிய நிலையில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில் குளங்களில்

