முல்லைத்தீவில் இருபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன (காணொளி)

Posted by - January 13, 2017

முல்லைத்தீவில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன் எஞ்சிய பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்; இவ்வாண்டு 41 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் ஒரு மாதங்களில் அறுவடை செய்யக்;கூடிய நிலையில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில் குளங்களில்

பிரதேச சபைகள் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பொறுப்பேற்க வேண்டும்- ஐங்கரநேசன்  (காணொளி)

Posted by - January 13, 2017

மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பிரதேச சபைகள் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் நடாத்திய கூட்டத்தில் மவீரர் துயிலும் இல்லங்களைப் பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் 2017 ஆண்டு உள்ளுராட்சி சபைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாருக்கும் மீண்டும் விளக்கமறியில் (காணொளி)

Posted by - January 13, 2017

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாரும் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரையும் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவானால் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டம்

Posted by - January 13, 2017

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான ஒரு வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

துறைமுக விற்பனைக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது

Posted by - January 13, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் அண்டிய 15,000 ஏக்கர் நிலப்பரப்பை சீன முதலிட்டாளர்களுக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நிவாரண நடவடிக்கைகளுக்கு படையினர் இணைத்துக் கொள்ளப்படுவர்

Posted by - January 13, 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு முப்படையினரின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டங்கள்

Posted by - January 13, 2017

முச்சக்கர வண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது

Posted by - January 13, 2017

காணிகளை கொள்ளையடிப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது.

யாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

Posted by - January 13, 2017

பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தனர். குறித்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு அறிக்கையை குற்றப் புலனாய்வாளர்கள் இன்னும்

விதிகளைத் தளர்த்தியதால் அமெரிக்க ராணுவத்தில் சேர சீக்கியர்கள் ஆர்வம்

Posted by - January 13, 2017

அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.