நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 15, 2017

நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா, மத்திய மாகாண விவசாயதுறை இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் காலை 10 மணியளவில் தலவாக்கலை நகரில் கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்

வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டபட்டது

Posted by - January 15, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊறணி அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல்லை முன்னாள் பங்குத்தந்தையும் அருட்திரு ரி.தேவராஜன் ஊறணி கிராமத்தைச் சேர்ந்த அருட்திரு எஸ்.அன்ரனிபால ஆகியோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர். ஊறணி அந்தோனியார் அடிக்கல்லை நாட்டும் நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் பிரதேசசபைத் தலைவர் எஸ்.சுகிர்தன், ஊறணி கிராமத்தின் கிராம சேவையாளர் கலாநிதி கேதன், மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். \

கிளிநொச்சி இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு (காணொளி)

Posted by - January 15, 2017

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள், விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை இரணைமடுக் குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகைக்குள அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறித்த வழிபாட்டு நிகழ்வில்,

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 15, 2017

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. நாட்டின் முதல் புனிதராக கிறிஸ்தவ மக்களினால் போற்றப்படும் புனித ஜோசப் வாஸ் ஆண்டாக இவ்வாண்டை, ஆயர்கள் சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கமைய இவ்வருடத்தை புனித ஜோசப் வாஸ் ஆண்டாக மட்டக்களப்பு மறை மாவட்டமும் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான விசேட நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமானது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு

கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 15, 2017

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய கிராம மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குப் புதிய நிர்வாகத்தினரைத் தெரிவு செய்யுமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, கணேசபுரம் பகுதியிலுள்ள இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் புதிய நிர்வாகத் தெரிவினை,பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மக்களை புறக்கணித்து செயற்படும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது-இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(காணொளி)

Posted by - January 15, 2017

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 42 ஆயிரத்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 13 பகுதிகளில் கடும் வறட்சியுடனான

அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017

கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் கைவினைக்கதிர் நூல் வெளியீட்டு விழாவும், கைப்பணியாளர்களுக்காண ஒன்று கூடல் நிகழ்வும் இன்று இடம்பெற்ற போது முதல்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்யும் கலையினை எதிர்கால சந்ததிகளும் அழிந்துவிடாது மேற்கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்

ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 15, 2017

தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிப்பு – 90% பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

Posted by - January 15, 2017

சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 15, 2017

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.