கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

333 0

vavuniya kanesapuramவவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய கிராம மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குப் புதிய நிர்வாகத்தினரைத் தெரிவு செய்யுமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, கணேசபுரம் பகுதியிலுள்ள இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் புதிய நிர்வாகத் தெரிவினை,பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மக்களை புறக்கணித்து செயற்படும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய், ஜந்து வருடம் கிராமத்தில் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள்-கிராமத்தில உண்மை செயற்பாட்டாளர்களை புறக்கணிப்பது ஏன்,இரத்துச் செய் இரத்துச் செய் புதிய நிர்வாகத்தை இரத்துச் செய்,

வேண்டும் வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு நீதி வேண்டும். என பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பல ஆண்டுகளாக தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவில்லை எனவும், தற்போதைய நிர்வாகத்தினர் கிராமத்தின் தேவைகளை அறிந்து கிராமத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம்சுமத்தினர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்குச்சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், புதிய நிர்வாகத் தெரிவினை மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.