யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 16, 2017

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தகால சூழல் இன்றும் தொடர்வதாக வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். மன்னார் பிரதான பாலத்தடி பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில்

மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூசை வழிபாடு!

Posted by - November 16, 2017

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு,  இன்று மாலை 4.30 மணிக்கு பெபிலியான சுனேத்திராதேவி விகாரையில் சிற்பபுப் பூசை வழிபாடு இடம்பெறவுள்ளது.

மத்தள  வானூர்தி நிலையத்துக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்

Posted by - November 16, 2017

கடந்த சில நாட்களாக மத்தள  வானூர்தி நிலையத்துக்குள் யானைகள் புகுந்து பாதுகாப்பு வேலிகளை உடைத்து அட்டகாசங்கள் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ர கிராமங்களில் மீள்­கு­டி­யேற்­ற அனுமதி!

Posted by - November 16, 2017

பச்­சி­லைப்­பள்ளி முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்தின் 200 மீற்­றர் பிர­தே­சம் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லர் பர­மோ­த­யன் ஜெய­ராணி தெரி­வித்­தார்.

கூட்ட மைப்பின் கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை!-வியாழேந்திரன்

Posted by - November 16, 2017

கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் பிரதமர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.

விக்­னேஸ்­வ­ரன் சிங்­கள இனத்­து­டன் குடும்ப உற­வு­களை வைத்­து­க்கொண்டு வடக்­கில் இன­வா­தத்தை தூண்­டு­வது ஏற்­ப­டை­ய­தல்ல!-இசுறு தேவப்­பி­ரிய

Posted by - November 16, 2017

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சிங்­கள இனத்­து­டன் குடும்ப உற­வு­களை வைத்­து­க்கொண்டு வடக்­கில் இன­வா­தத்தை தூண்­டு­வது ஏற்­ப­டை­ய­தல்ல என்று மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுறு தேவப்­பி­ரிய தெரி­வித்­தார்.

ஈபிஆர்எல்எவ் விலகுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்! – சம்பந்தன்,சுமந்திரன்

Posted by - November 16, 2017

ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்று. இந்த கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனிவழியில் சென்று கூட்டமைப்பிலிருந்து

மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு மைத்திரி தயார்!

Posted by - November 16, 2017

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு,

150 போதை மருந்துகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கைது

Posted by - November 16, 2017

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் போதை மாத்திரையுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் குறித்த பகுதியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 150 போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதிக வட்டி பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்தவர் கைது!

Posted by - November 16, 2017

அதிக வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 50 இலட்சம் ரூபா வரை மோசடி செய்த நபர், சிலாபம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.