முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ர கிராமங்களில் மீள்­கு­டி­யேற்­ற அனுமதி!

1137 0

பச்­சி­லைப்­பள்ளி முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்தின் 200 மீற்­றர் பிர­தே­சம் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லர் பர­மோ­த­யன் ஜெய­ராணி தெரி­வித்­தார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் மிதி­வெடி கார­ண­மாக மிக­வும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக முக­மா­லைப் பிர­தே­சம் காணப்­ப­டு­கின்­றது. இருப்­பி­னும் மிதி­வெடி அகற்­றும் நிறு­வ­னத்­தி­னர் தொடர்ச்­சி­யாக துப்புரவுப் பணி­களை மேற்­கொண்டு மக்­க­ளின் மீள்­குடி­யேற்­றத்துக்கு அதனை வழங்கி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்­திற்கு உட்­பட்ட ஏ 9 சாலை­யில் இருந்து 200 மீற்­றர் தூரத்­திற்கு மக்­களை மீள்­கு­டி­ யேற்­றம் செய்ய மிதி­வெடி அகற்­றும் பிரி­வி­னர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­க­வும் அத்­தோடு முக­மா­லைப் பகு­தி­யில் காணப்­ப­டு­கின்ற வைர­வர் ஆல­யத்­தின் பகு­தி­யை­யும் விடு­விக்க அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­க­வும் தெரி­விக்கப்பட்டது.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தா­வது:

குறித்த கிரா­மத்­தில் ஒரு பகுதி கடந்த வரு­டத்­தில் விடுவிக்­கப்­பட்டு அங்கு மக்­கள் மீள்­கு­டி­யேற்­றம் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­கள் ஏற்­ப­டுத்­தி­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது ஒரு பகுதி எங்­க­ளுக்கு விடு­ விக்­கப்­பட்­டுள்­ளது.அங்கு குடி­யே­று­ப­வர்­கள் தொடர்­பாக விவ­ரங்­கள் பெறப்­பட்­டுள்­ளன.

அனைவ­ருக்­கும் அங்கு வெடி­பொ­ருள்கள் காணப்­ப­டு­வது தெரி­யும், இருப்­பி­னும் நாங்­கள் தொடர்ச்­சி­யாக மிதி­வெடி அகற்­று­ப­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றோம். முன்­ன­ரிமை அடிப்­ப­டை­யில் இந்­திரா புரத்­தினை வழங்­கி­யுள்­ளோம். அடுத்த வரு­டத்­தில் அங்கு மீள்­கு­டி­ யேற்­றம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் கிடைக்­கும் என நம்­பு­கின்­றோம். என்­றார்.

Leave a comment