அதிக வட்டி பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்தவர் கைது!

313 0

அதிக வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 50 இலட்சம் ரூபா வரை மோசடி செய்த நபர், சிலாபம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர் சிலாபம் – வெல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதை அறிந்தவுடன், மேலும் சிலரும் இந்த விடயம் குறித்து விசாரித்துள்ளதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவர் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து சரியான தகவல் தெரியவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment