150 போதை மருந்துகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கைது

286 0
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் போதை மாத்திரையுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் குறித்த பகுதியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

150 போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment