மத்தள  வானூர்தி நிலையத்துக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்

1715 0

கடந்த சில நாட்களாக மத்தள  வானூர்தி நிலையத்துக்குள் யானைகள் புகுந்து பாதுகாப்பு வேலிகளை உடைத்து அட்டகாசங்கள் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யானைகளை துரத்தும் நடவடிக்கையில் அம்பாந்தோட்டை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால் காட்டு யானைகளின் இருப்பிடங்களுக்கு கேள்வி குறியாகியுள்ளதாலேயே யானைகள் வானூர்தி நிலையத்தை நோக்கி படையெடுப்பதாக தொிவிக்கப்படுகிறது.

Leave a comment