விக்­னேஸ்­வ­ரன் சிங்­கள இனத்­து­டன் குடும்ப உற­வு­களை வைத்­து­க்கொண்டு வடக்­கில் இன­வா­தத்தை தூண்­டு­வது ஏற்­ப­டை­ய­தல்ல!-இசுறு தேவப்­பி­ரிய

275 0

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சிங்­கள இனத்­து­டன் குடும்ப உற­வு­களை வைத்­து­க்கொண்டு வடக்­கில் இன­வா­தத்தை தூண்­டு­வது ஏற்­ப­டை­ய­தல்ல என்று மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுறு தேவப்­பி­ரிய தெரி­வித்­தார்.

அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது:

நாட்­டில் அமை­தி­யான சூழ்­நிலை நில­வு­கின்­றது. இந்த அமை­தி­யைச் சீர்­கு­லைக்க சிலர் சூழ்ச்சி செய்­கின்­ற­னர். முஸ்­லிம், தமிழ் மாண­வர்­கள் இன்று மும்­மொ­ழி­க­ளி­லும் தேர்­ச்சி­ய­டைந்­துள்­ள­னர்.

சர­ள­மாக சிங்­கள மொழி­யி­னைப் பேசு­கின்­ற­னர். இதுவே இன­நல்­லி­ணக்­கத்­தின் வெற்றி.  ஆனால் தெற்­கில் உள்ள அர­சி­யல்­வா­தி­கள் இன ஒரு­மைப்­பாடு இல்லை என்று குறை கூறு­கின்­ற­னர்.

சிங்­கள மாண­வர்­கள் தமது தாய்­மொ­ழி­யினை மட்­டுமே கற்க முனை­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு தமது மொழி­யை­கூட முறை­யா­கப் கற்க முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. தெற்­கில் உள்ள அர­சி­யல்­வா­தி­கள் தமது பிள்­ளை­க­ளுக்கு தமிழ் மொழியை கற்­பிக்­கின்­றார்­களா என்­பது சந்­தே­கமே.

கொழும்­பில் பிறந்து, கல்வி கற்று சிங்­கள மக்­க­ளு­டன் அர­சி­யல் விட­யங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­வ­ரும் சிங்­க­ள­வ­ரு­டன் குடும்ப உற­வைக் கொண்­ட­வ­ரு­மான விக்­னேஸ்­வ­ரன் வடக்­கிற்­குச் சென்று இனப்­பி­ரச்­சி­னையை உரு­வாக்க முற்­ப­டு­வது முறை­யற்­றது. புலம்­பெ­யர் வாழ் தமி­ழ­ரது விருப்­பங்­களை நிறை­வேற்­று­வ­தை­விட இலங்­கை­யில் வாழும் அனைத்­துத் தமிழ் மக்­க­ளின் விருப்­பங்­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தைப் பற்றி சிந்­திப்­பது அவ­ரது பத­விக்கு பொருத்­த­மா­கும் – என்­றார்.

Leave a comment