சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 2, 2017

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல்மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெல்கமவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே,வெல்கமவை அடுத்த மாதம் 06ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறுநீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைமை நிதி முகாமையாளரை கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனகுற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 2, 2017

2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை செய்யப்பட விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கம்பஹா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கருகில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உற்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவது போன்றுள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட

மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் -பொன்சேகா

Posted by - February 2, 2017

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரஞ்சன் ராமநாயக்கவை விட மேர்வின் சில்வா சிறந்தவர் எனக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவிட மேர்வின் சில்வா சிறந்தவர். நாட்டை ஆட்சி செய்ததாக கூறும் ஒருவர் தவறு செய்பவர்களை அவரை விட இவர் சிறந்தவர் என்று

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார்கள் தலைமை தாங்க வேண்டியது அவசியம்-மைத்திரிபால சிறிசேன

Posted by - February 2, 2017

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார் தலைமை தாங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி லபதூவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து குடும்பங்களையும் போதையற்ற குடும்பங்களாக மாற்றும் முயற்சியின் தலைமைத்துவத்தை தாய்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். குடும்ப அலகினை அபிவிருத்தி அடையச் செய்வதற்கும் சுபீட்சமாக்குவதற்குமான பிரதான தடையாக போதைப் பொருள் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பத்தையும் சமூகத்தையும்

தமிழர் வீரத்தின் தனிப்பெரும் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 2, 2017

சென்னை கொளத்தூரில் ஜனவரி 29ம் தேதி நடந்த முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய அறப் போராட்டத்தையும் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தையும் ஒப்பிட்டுப் பேசிய போது மற்றவர்களைப் போலவே நானும் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படியொரு கோணத்தில் இதைப் பார்க்க முடியுமா – என்கிற வியப்பு கூட ஏற்பட்டது. ”இன்றைக்கு இளைஞர்கள் திரள வாட்ஸ் அப் போன்ற தகவல் தொடர்பு வாய்ப்புகள் ஏராளம். 2009ல் இப்படியொரு வசதி இல்லாத காலத்தில் ஒன்றரை லட்சம் பேரைத்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை -சமீர பெரேரா

Posted by - February 2, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை என இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் சுதந்திர தினமன்று தனியாக சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு நாட்டில் தேசிய தின நிகழ்வுகளை அரசாங்கத்தினாலேயே நடத்த முடியும். இதுவே ஜனநாயக அரசாங்கமொன்றின் நெறிமுறையாகும். இவ்வாறான பின்னணியில்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

Posted by - February 2, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கணக்காய்வாளர் நாயகம் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பிணைமுறி மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் கணக்காய்வாளர்

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும்- மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க (காணொளி)

Posted by - February 2, 2017

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் மற்றும், கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்களை கௌhரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் கல்விகற்றவர்களே வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் முன்னர் பதவி வகித்த காலம்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா போக்குவரத்து சபை