ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

268 0

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கணக்காய்வாளர் நாயகம் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பிணைமுறி மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இந்த சம்பவத்தில் கணக்காய்வாளர் நாயகம் சுயாதீனமான முறையில் செயற்பட்டுள்ளார் என மேலும் தெரிவித்துள்ளார்.