முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை என இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் சுதந்திர தினமன்று தனியாக சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
ஒரு நாட்டில் தேசிய தின நிகழ்வுகளை அரசாங்கத்தினாலேயே நடத்த முடியும். இதுவே ஜனநாயக அரசாங்கமொன்றின் நெறிமுறையாகும்.
இவ்வாறான பின்னணியில் தன்னிச்சையாக தாங்கள் நினைத்தவாறு சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்துவோர் நாகரீகமடையாத பழங்குடியினத்தவர்களேயாவர்.
மஹிந்தவினால் இந்த கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் மஹிந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறு வடக்கில் எவரேனும் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தியிருந்தால் அதனை பிரிவினைவாதமாக மஹிந்த அடையாளப்படுத்தியிருப்பார் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.