சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

258 0

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல்மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வெல்கமவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனவே,வெல்கமவை அடுத்த மாதம் 06ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறுநீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைமை நிதி முகாமையாளரை கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனகுற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் நிதிகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுதொடர்பில் சஷி வெல்கம கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.