அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

285 0

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவது போன்றுள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. அவ்வாறான எண்ணம் உடையவர்கள் யாராயினும் அதற்கு இடமளிக்கமாட்டோம். கட்சி தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.