முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

Posted by - February 5, 2017

தமிழகத்தின் முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியுள்ளார். அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக பொது செயலர் சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிய வேண்டும் என கோருகிறேன் என்றார்.

15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு

Posted by - February 5, 2017

15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

Posted by - February 5, 2017

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மாரடைப்பின் போது உடனடியாக வழங்க வேண்டிய மருந்து இறக்குமதி

Posted by - February 5, 2017

இருதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நிதி மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம்; பொலிஸாரின் வேண்டுகோள்

Posted by - February 5, 2017

நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிவனொலிபாதமலைக்கு 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்கள்!

Posted by - February 5, 2017

வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு நேற்றும், இன்றும் சுமார் 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்ள் சிவனொலிபாதமலைக்கு வந்து சென்றிருப்பதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தலைமைத்துவத்தை 2020ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு-சஜித் பிரேமதாச

Posted by - February 5, 2017

 2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அரச தலைமைத்துவத்தையும் ஹம்பாந்தோட்டைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர் வீ.எஸ். ராமலிங்கம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். எதிர்வரும் 2020ம் ஆண்டில் இலங்கையில்

நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன்…………

Posted by - February 5, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது அதிக குற்ற செயல்களினால் முன்னாள் ஜனாதிபதியை, மக்கள் வெறுப்பதற்கு காரணமாக இருந்தவர் நாமல் ராஜபக்ச என மஹிந்தவை நேசிக்கும் அவரது பெரும்பான்மை ஆதவாளர்கள தெரிவித்துள்ளனர். நாமல் ராஜபக்ச தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்ட தவறான செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். நாமலினாலே மஹிந்த தனது அதிகாரம் உட்பட அனைத்தையும் இழந்து

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல்

Posted by - February 5, 2017

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளனர். ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஐ.தே.க. விலிருந்து கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம உட்பட ஒரு குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐ.தே.க. யின் அமைச்சர்கள் குறித்து இதன்போது ஆராய்ந்துள்ளதாக  தகவல் வட்டாரங்கள்

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - February 5, 2017

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்திய நாட்டவர் இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வந்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.