இருதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு வௌிநாட்டுத் தயாரிப்பான இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் நோயாளியின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் இந்த மருந்து வழங்கப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர். தற்போது அந்த மருந்தின் விலை ஒரு இலட்சத்து 20,000 ரூபா என்பதுடன், அதனை விட குறைந்த விலைக்கு குறித்த மருந்தை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
இருதய நோய் சம்பந்தமான விஷேட நிபுணர்கள் சங்கத்துடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

