தமிழகத்தின் முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார்.
போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார்.
இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக பொது செயலர் சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக முன்மொழிகிறேன்.
அனைவரும் வழிமொழிய வேண்டும் என கோருகிறேன் என்றார்.

