சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - February 8, 2017

சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில், நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, குறுக்கு கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான பரீட்சை நிறைவடைந்துள்ளதாக கூறினார். எனினும், ஆளும் தரப்பில்

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

Posted by - February 8, 2017

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது எனவும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று கூடி சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்

இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் ஆய்வு

Posted by - February 8, 2017

இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் ஆய்வு செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான புறக்கணித்தல்களை கலைவதற்கான ஐக்கிய நாடுகளின் குழுவினால் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ம் திகதி வரையில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இலங்கையில் பெண்கள் முகம் கொடுக்கின்ற புறக்கணிப்புகள் மற்றும் பாதுகாப்பின்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டில் பணிபுரிந்த இலங்கை பெண் 11 வருட வேதனமின்றி நாடு திரும்பினார்.

Posted by - February 8, 2017

குவைட்டில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வருடங்களுக்கான வேதனப் பணத்தை வழங்காமல், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குவைட் டைம்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்த அடிப்படையில் குறித்தப் பெண் குவைட் சென்று பணிபெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்த காலப்பகுதியில் அவரது ஒப்பந்த வேதனத்தில் 10 சதவீதத்தை மாத்திரமே வழங்கியதாகவும், எஞ்சிய தொகையை சேமிப்பில் வைப்பதாக தொழில்தருணர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் நாடு திரும்ப தீர்மானத்து தமது

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Posted by - February 8, 2017

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017

முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று 09ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை

தொடர் சந்திப்புகளுக்கு இணக்கம்

Posted by - February 8, 2017

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றிருந்தது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவித்த சவூதி அரேபியத் தூதுவர் அஷ்மி தாஸிம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமையும் என்று அஷ்மி தாஸிம் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம்பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது. கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அரச படையினரை அங்கிருந்து அகற்றி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இந்த பிரேரணையை கூட்டமைப்பு முன்வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்

திருகோணமலையில் போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - February 8, 2017

திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கைதானவர்கள் அவர்கள் திருகோணமலை துறைமுக காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.