விபத்துக்களில் பலர் பலி

Posted by - February 10, 2017

கலேவலை – தம்பகஹமுல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார். அத்துடன், சிறு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டியொன்று கெப் ரக வாகனத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் இன்று நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்;;;;; தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கெப் ரக வாகன சாரதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, காலியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தொடருந்து வீதிக்கு

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல்

Posted by - February 10, 2017

திருகோணமலை சீனன் குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. குறித்த தீர்மானத்தின் காரணமாக நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்படும். எனவே, குறித்த எண்ணெய் குதங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பாவணைக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் டீ. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

யாழ் சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Posted by - February 10, 2017

வெடிக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த இளைஞன் பலி

Posted by - February 10, 2017

ஹப்புத்தளை பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற இளைஞன் ஒருவர், நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பலியானார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது. ஹோமாகம பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்ற இளைஞனே சம்பவத்தில் பலியானதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் உடலத்தை மீட்கும் பணிகளில் ஹப்புத்தளை காவல்துறையினருடன் இணைந்து பிரதேச மக்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

Posted by - February 10, 2017

யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதிகளை வழங்கி வைத்தனர். குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

 எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா(காணொளி)

Posted by - February 10, 2017

  யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அம்சமாக, கடந்த வருட நடுப்பகுதியில் எழுவைதீவுப் பிரதேசத்தில் ஒன்றிணைந்த மின்சக்தி திட்ட, மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எழுவைதீவு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த திட்டம்

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - February 10, 2017

நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய இராஜரட்ணம் என இனங்காணப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் நடைபெறவிருந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக