எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல்

252 0

திருகோணமலை சீனன் குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

குறித்த தீர்மானத்தின் காரணமாக நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்படும்.

எனவே, குறித்த எண்ணெய் குதங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பாவணைக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் டீ. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.