நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த இளைஞன் பலி

285 0

ஹப்புத்தளை பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற இளைஞன் ஒருவர், நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பலியானார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

ஹோமாகம பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்ற இளைஞனே சம்பவத்தில் பலியானதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் உடலத்தை மீட்கும் பணிகளில் ஹப்புத்தளை காவல்துறையினருடன் இணைந்து பிரதேச மக்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.