நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

418 0

நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய இராஜரட்ணம் என இனங்காணப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் நடைபெறவிருந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வருகைதந்து, டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லும்போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா தொழிற்சாலை கொங்கிறீட் பாதையில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 ஆண்கள் ஒரு சிறுவன், பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.