யாழ் சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

323 0

வெடிக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் இரண்டும், மிதிவெடிகள் இரண்டு , ஒரு கிளைமோர் மற்றும் செல் போன்ற வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரசாலை கனகம்புளியடிக்கு அருகில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து இன்று நண்பகலளவில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டின் முன்பு, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், தற்போது அது விடுவிக்கப்பட்டு துப்பரவு வேலைகளை செய்தபோது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.