மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 21, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்ககோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. இன்று சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த

கொக்கட்டிச்சோலையில் இளைஞர் வெட்டிக்கொலை

Posted by - November 21, 2017

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பனை நீலமடு பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நீலமடுப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞர் உட்படச் சிலர் இரு சாராரையும் பிரித்து விடுவதற்காகச் சென்றனர். அப்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த இளைஞர் மரணமானார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸார்

ஆவா குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

Posted by - November 21, 2017

ஆவா எனப்படும் குழுவின் மேலும் இரு முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட வேளை, அதில் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், இவர்களது கையடக்கத் தொலைபேசியில், வாளை வைத்திருப்பது போன்ற புகைப்படங்களும் காணப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை – சபாநாயகர்

Posted by - November 21, 2017

திறைசேரி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தொலைபேசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் அவை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின்; தொலைபேசி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டடுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை இன்று விடுத்தார். இதற்கமைவாக கட்சி

அனுராதபுர வைத்தியசாலை பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

Posted by - November 21, 2017

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதி மற்றும் மேலதிக சேவைகள் அதிகாரிகள் இன்று ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார். மேலதிக வேலை நேர சம்பளத்தை குறைத்தமைக்கு எதிராக குறித்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, செலுத்தப்படவிருக்கும் மேலதிக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கை விரல் அடையாளப்பதிவு தொடர்பில் பின்னர் தெளிவுபடுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடைந்ததாக வைத்தியசாலை

அரச பல்கலைக்கழக மாணவர் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - November 21, 2017

அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் 2020ம் ஆண்டில் 50,000 வரை பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடம் பல்கலைக்கழக அனுமதி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய வெற்றி எனவும், அரச பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கையை மேலும்

இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயன்படுத்த முடியாதுள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 21, 2017

இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் சொத்துக்கள் மீண்டும் இழக்கப்படாதென்று உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் புலம்பெயர் வாழ் தமிழர்களின் நிதியை அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த முடியாதுள்ளதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கூறியுள்ளார். கடந்த 15.11.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று வாழ்வாதார உதவகளை வழங்கிவைத்து பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகளிர் விவகார அமைச்சு நிதியின் கீழ் வட

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

Posted by - November 21, 2017

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு – தமிழ்நாடு என்ற பெயர் சூட்டலை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்கொடுத்த – , ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு மாத காலம் சட்டப் போராட்டத்தினை நீதிமன்றத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Posted by - November 21, 2017

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார். சம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு

இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை – சுமந்திரன்

Posted by - November 21, 2017

இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார். இதுதொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த  கருத்து தெரிவித்த சுமந்திரன், தேசியக் கொடிக்கு மறுப்புத் தெரிவித்து போலி தேசியவாதத்தை வெளிப்படுத்த சிலர் முனைவதாக குற்றம் சுமத்தினார். தேசியக்கொடி குறித்து தமிழ் தேசிய