![](https://www.kuriyeedu.com/wp-content/uploads/2017/11/sumanthiran-1-300x225.jpg)
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார்.
இதுதொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த கருத்து தெரிவித்த சுமந்திரன், தேசியக் கொடிக்கு மறுப்புத் தெரிவித்து போலி தேசியவாதத்தை வெளிப்படுத்த சிலர் முனைவதாக குற்றம் சுமத்தினார்.
தேசியக்கொடி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அதிருப்தி இருக்கின்ற போதும், ஒருநாட்டின் தேசிய கொடியாக அது இருக்கும் வகையில், அதற்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்றும் சுமத்திரன் குறிப்பிட்டுள்ளார்.